Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவை மே-13ம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என்று பெங்களூரு சிறை நிர்வாகத்திற்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சசிகலா ஆஜராகும்போது சாட்சிகள் அளித்த சாட்சியங்கள் குறித்து விளக்கம் அளிக்கவும், நீதிபதியின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்காகவும் சசிகலாவை ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, சசிகலா இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று, 2017ம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார வளாகத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
4 ஆண்டுகள் சிறை தண்டனையில் தனது இரண்டு ஆண்டு சிறைவாசத்தை நிறைவு செய்துள்ளார் சசிகலா. இந்நிலையில், அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவை மே-13ம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என்று பெங்களூரு சிறை நிர்வாகத்திற்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.